பேருந்து கட்டணங்கள் நேற்று (29/12) முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசன எண்ணிக்கைகளுக்கு அமையவே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், இன்று (30/12) முதல் அச்சட்டம் கடுமையாக்கப்படுகிறது என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, எரிபொருள் விலை உயர்வு மற்றும் வாகன உதிரிபாக விலை அதிகரிப்பு போன்ற காரணங்களை கருத்திற்கொண்டு குறைந்தபட்ச பேருந்து கட்டணங்களை 14 ரூபாவிலிருந்து 3 ரூபாவினால் உயர்த்தப்பட்டு, 17 ரூபாவாக அதிகரிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதேவேளை இன்று முதல் நடத்துநரின்றி பேருந்து சேவைகளை முன்னெடுக்கும் திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.