‘ஆட்சியாளர்களுக்கு அதி போஷாக்கு மக்களுக்கு மந்த போஷாக்கு’

ஆட்சியாளர்களுக்கு அதி போஷாக்கும் மக்களுக்கு மந்த பேஷாக்குமே ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ மக்கள் குறையை கேட்டறியும் மனிதநேய பயணத்தின் நான்காம் நாள் விஜயத்தை நேற்று (29/12) சூரியவெவ நகரில் மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஊட்டச்சத்தின்மை தலைவிரித்தாடிய நாடு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது என்றும், குறைந்த எடை கொண்ட குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் பெற்றுள்ள நாடு என்ற சாதனையை இலங்கை பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதனை தொடர்ந்து, ‘குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு’ என்ற துண்டு பிரசுரத்தையும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வழங்கி வைத்ததோடு, சூரியவெவ பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய இளைஞர் சக்தியின் செயற்குழு உறுப்பினருமான சுஹக பிரதீப்பின் சூரியவௌ ஐக்கிய இளைஞர் சக்தி அலுவலகத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ திறந்து வைத்தார்.

'ஆட்சியாளர்களுக்கு அதி போஷாக்கு மக்களுக்கு மந்த போஷாக்கு'
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version