துங்கலப்பிட்டிய – கெபுனுகொட கடலில் நீராடச் சென்ற மூவரில் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.
17 மற்றும் 23 வயதுகளையுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்களுடன் சென்ற மற்றைய இளைஞன் கடலில் மூழ்கியுள்ள நிலையில், அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.