இலங்கை பொருளாதரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், மாணிக்க கல் இலங்கைக்கு கை கொடுத்துள்ளது. இலங்கையில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட ஆசியாவின் இராணி என பெயர் சூட்டப்பட்ட உலகின் பெரிய மாணிக்க கல் 100 மில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கு அதாவது இரண்டாயிரம் கோடி இலங்கை ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ஐக்கிய அரபு இராட்சிய நிறுவனம் ஒன்று இந்த தொகையினை கொடுத்து ஆசியாவின் இராணி மாணிக்க கல்லை வாங்கவுள்ளது. தற்போதைய இலங்கையின் நெருக்கடியான சூழலில் இந்த பெறுமதி இலங்கைக்கு வருவது இலங்கையில் நிலவும் அமெரிக்க டொலர் பிரச்சினையை தீர்க்கும் அதேவேளை, இலங்கை பொருளாதரத்தை மேம்படுத்த உதவுமெனவும் நம்பப்படுகிறது.
