பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்

இவ்வருடம் நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் மாற்றமேதும் செய்யப்படவில்லை என, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேரா தெரிவித்துள்ளார்.

உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2021 ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்தது. எனினும் இவை இரண்டு முறை பின்போடப்பட்டன.

முன்பு திட்டமிட்ட வகையில் புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22 ஆம் திகதியும், உயர்தர பரீட்சை இந்த வருடம் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கும் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி. பெரேரா தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் தொடர்பில்  வெளியான தகவல்

Social Share

Leave a Reply