நேற்று(09.07) நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்கள் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் தாக்கபப்ட்ட சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தலதுவ தெரிவித்துள்ளார்.
விசேட அதிரடிப்படையின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை வழி நடத்தியிருந்தார். பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை நடைபெற்று வருவதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த சம்பவத்துக்கு தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். அதன் பின்னரே அவரின் வீட்டுக்கு தீ மூட்டப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்தி