இஸ்ரேயல் போரில் மற்றுமொரு இலங்கையர் மாயம்!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதல் காரணமாக மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரையில் காணாமல் போன இலங்கையார்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. மேலும் ஒரு இலங்கையர் காயமடைந்துள்ளதுடன், அவர் அப்பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் பணிபுரிந்து வந்த ஒருவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன இலங்கையர்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள தூதரகம், அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைப் பெற முடியாவிட்டால், மேலதிக உதவிக்காக அவர்களின் விபரங்கள் செஞ்சிலுவைச் சங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply