தொடர்ந்தும் அதிகரிக்கும் மரக்கறிகளின் விலைகள்!

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி போஞ்சி, கேரட், எலுமிச்சை, பச்சை மிளகாய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

மொத்த விற்பனை நிலையத்தில் போஞ்சி கிலோ 800 முதல் 850 ரூபாய் வரையிலும், கேரட் கிலோ 550 முதல் 600 ரூபாய் வரையிலும், முட்டைகோஸ் கிலோ 540 ரூபாய் வரையிலும், தக்காளி கிலோ 590 ரூபாய் வரையிலும், கறி மிளகாய் 950 ரூபா வரையிலும், கத்தரிக்காய், வெண்டைக்காய் கிலோ 350 ரூபா வரையிலும், இஞ்சி கிலோ 1750 ரூபா வரையிலும், பச்சை மிளகாய் கிலோ 1100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மெனிங் சந்தையில் போஞ்சி மொத்த விலை கிலோ 650 ரூபாவாகவும், கேரட் கிலோ 350 ரூபாவாகவும், முட்டைகோஸ் கிலோ 320 ரூபாவாகவும், தக்காளி கிலோ 350 ரூபாவாகவும், கத்தரிக்காய் கிலோ 400 ரூபாவாகவும், பச்சை மிளகாய் கிலோ 800 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

Social Share

Leave a Reply