கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்..!

கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீரப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது கிளிநொச்சி அலுவலகத்தின் முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, “ எமது உறவுகள், காணி, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தாத ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடுகிறோம்’’ என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

தமக்கு நீதி தராத தரப்புடன் நல்லிணக்க பேச்சுவார்த்தையினை மேற்கொள்ள முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply