புதிய களனி பாலம் எதிர்வரும் திங்கட்கிழமை (12) அதிகாலை 5 மணி வரை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருத்தப் பணிகள் காரணமாக பாலம் நேற்றிரவு 9 மணி முதல் மூடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கொழும்பிலிருந்து கட்டுநாயக்கவை நோக்கியும், கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கியும் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், துறைமுகத்தை நோக்கி பயணிக்க முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.