கோப் குழுவின் தலைவர் பதவியை ரோஹித அபேகுணவர்தன இராஜினாமா செய்யவில்லை என்றால், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கோப் குழுவின் உறுப்பினர்கள் பலர் பதவி விலகியமை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையால் கோப் குழுவின் நற்பெயர் சீர்ககுலைந்துள்ளதாகவும் நளின் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.