ஜடேஜாவின் அசாத்திய சகலதுறை ஆட்டம்..!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

தர்மசாலாவில் இன்று(05.05) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டிழப்பிற்கு 167 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

சென்னை அணி ஜடேஜா 43 ஓட்டங்களையும், ருத்துராஜ் கெய்க்வாட் 32 ஓட்டங்களையும், டேரில் மிட்செல் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

பஞ்சாப் அணி சார்பில் பந்துவீச்சில் ராகுல் சாஹர், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

168 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. 

பஞ்சாப் அணி சார்பில் பிரப்சிம்ரன் சிங் 30 ஓட்டங்களையும், சஷாங் சிங் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

சென்னை அணி சார்பில் பந்துவீச்சில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜித் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்படி, இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன் போட்டியின் ஆட்ட நாயகனாக சென்னை அணியின் ஜடேஜா தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய சென்னை அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 12 புள்ளிகளுடன் 3ம் இடத்திற்கு முன்னேறியதுடன், பஞ்சாப் அணி 8 புள்ளிகளுடன் 8ம் இடத்தில் உள்ளது.  

Social Share

Leave a Reply