சிறுபோகத்தில் நெற்பயிர்ச்செய்கை மானியத் திட்டத்தின் கீழ் 2.5 பில்லியன் ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 213,771 விவசாயிகளுக்கு இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, 167,362 ஹெக்டேயர் நெற்பயிர்ச் செய்கைக்காக இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வருடம் சுமார் 450,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய பயிரிடப்படும் அனைத்து நெற்பயிர்களுக்குமாக சுமார் 7.5 பில்லியன் ரூபாய் நிதி மானியமாக வழங்கப்படுவதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.