சன்ஷைன் சுத்தா கொலை வழக்கு – மேலுமொருவர் கைது

‘சன்ஷைன் சுத்தா’ கொலை வழக்குடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் ‘சன்ஷைன் சுத்தா’ கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ‘டிங்கர் லசந்த’ எனப்படும் பாதாள உலக்குழு உறுப்பினரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ‘சன்ஷைன் சுத்தா’ கொலை செய்யப்பட்ட வேளையில், டிங்கர் லசந்தவுடன் வேனில் பயணித்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

சன்ஷைன் சுத்தா கொலை வழக்கு – மேலுமொருவர் கைது

Social Share

Leave a Reply