‘அமைச்சர்களை பதவி விலக்க எனக்கு அவசியமில்லை’

அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு தொடர்பில் மாறுப்பட்ட கருத்துகளை கொண்டுள்ள விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய 3 அமைச்சர்களையும் பதவி நீக்குவதில் தனக்கு எவ்வித அவசியமும் இல்லை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (27/12) இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே, ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

கூட்டுப்பொறுப்பை மீறியமை தொடர்பில் பிரேமதாஸவின் கடந்த ஆட்சிக் காலத்தில் லலித் அத்துலத்முதலி மற்றும் ஜி.எம் பிரேமசந்திர ஆகிய அமைச்சர்களுக்கு எதிரான வழக்கில் நீதிபதி மார்க் பெர்ணான்டோ வழங்கிய தீர்ப்பை ஜனாதிபதி இதன்போது நினைவுக்கூர்ந்தார்.

'அமைச்சர்களை பதவி விலக்க எனக்கு அவசியமில்லை'

Social Share

Leave a Reply