மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரனின் 45ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நுவரெலியா கார்லிபெக் தமிழ் வித்தியாலயத்தின் உயர்தர மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்ட பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜின் தலைமையில், நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட கார்லிபெக் தமிழ் வித்தியாலயத்தின் உயர்தர மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு நுவரெலியா பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று (27/12) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வினை தொடர்ந்து, சுனாமி இயற்கை சீற்றத்தினால் கடந்த 2004ஆம் ஆண்டு உயிர்நீத்த உறவுகளுக்காக மெழுகுவர்த்தியேற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி இராமேஸ்வரன், நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ், பிரதேச சபை செயலாளர், நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்

Social Share

Leave a Reply