அரச சேவைக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுநர்களின் சேவை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி சுமார் 50,000 பேருக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிரந்தர நியமனத்துடன் அவர்களது சம்பளம் 31,490 ஆக உயர்த்தப்படுவதுடன், ஏனைய கொடுப்பனவுகளுடன் மாதாந்தம் 41,490 ரூபா வழங்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.