விபத்துக்கள் காரணமாக 162 பேர் வைத்தியசாலையில் அனுமதி 

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்கள் காரணமாக 162 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களில் வீதி விபத்துக்கள் காரணமாக 37 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார்.

இருப்பினும், பண்டிகை காலத்தில் பட்டாசு விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக  கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version