இலங்கைக்கு 40 மில்லியன் டொலர்களை வழங்கியது அமெரிக்கா

அமெரிக்ககா, இலங்கைக்கு 40 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலேய்ன்னா டப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கை சனச அபிவிருத்தி வங்கியினூடக இந்த பணம். சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கும், விசேடமாக பெண் தொழில் முயற்யாளர்களது தொழில் அபிவிருத்திக்குமாக வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இலங்கையின் வளர்ச்சிக்கு தொடர்ந்தும் கைகொடுக்குமெனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலேய்ன்னா டப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
சனச அபிவிருத்தி வங்கியுடன் தொடர்பு கொண்டு, இந்த பணத்தினை என்ன தேவைகளுக்காக,எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் விபரங்களை பெற்று சரியான முறையில் தங்களது தொழிலை வளர்த்துக் கொள்வது மக்களின் கைகளில் உள்ளது என்பதனை வி தமிழ் ஊடகம் மக்களுக்கு அறிவுறுத்துகிறது.

Social Share

Leave a Reply