இலங்கை வீரர்களுக்கெதிரான குற்றச்சாட்டு – மறுத்தது இலங்கை கிரிக்கெட்

இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 20-20 தொடரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சிலர் வேண்டுமென்றே சரியாக விளையாடவில்லை, மற்றும் முழுமையாக தங்கள் திறமையினை வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஊடங்களில் வெளிவந்துள்ளதாகவும் அதில் உண்மை தன்மையில்லை எனவும் இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரையில் இலங்கை கிரிக்கெட்டுக்கு அணி முகாமைத்துவதிலிருந்து அவ்வாறான குற்றச்சாட்டுகள் கிடைக்கவில்லையெனவும் குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி தென்னபிரிக்கா அணியுடனான ஒரு நாள் சர்வதேச போட்டி தொடரில் 2-1 என வெற்றி பெற்றுள்ளது. அத்தோடு முன்னேற்றகரமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் ஊடக தர்மமின்றி இவ்வாறு செய்திகளை வெளியிட வேண்டாமென கேட்டுக் கொள்வதோடு, இவ்வாறான செய்திகள் 20-20 உலககிண்ணத்துக்கு வீரர்களை தயார் செய்யும் நிலையில் அவர்களுக்கு மனதை பாதிக்கும் என இலங்கை கிரிக்கெட் மேலும் தெரிவித்துளளது

.

இலங்கை வீரர்களுக்கெதிரான குற்றச்சாட்டு - மறுத்தது இலங்கை கிரிக்கெட்

Social Share

Leave a Reply