மனித உரிமை கூட்ட தொடருக்காக இலங்கை தயார்

வெளியுறவு அமைச்சர் G.L பீரிஸ் தலைமையிலான குழுவினர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத்துக்கு செல்ல தயாராகியுள்ளனர். இம்மாதம் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் 01 வரை இந்த கூட்ட தொடர் நடைபெறவுள்ளது.

ஜெனிவாவில் நடைபெறவுள்ள 49 ஆவது மனித உரிமைகள் கூட்ட தொடரில், இலங்கை தொடர்பிலான எழுத்து மூலமான அறிக்கையினை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் முன் வைக்கவுள்ளார்.

மார்ச் மாதம் 02 ஆம் திகதி இலங்கை விவகாரம் சபையில் முன் வைக்கப்படவுள்ளது. இந்த கூட்ட தொடரில் வெளியுறவு அமைச்சர் G.L பீரிஸ் இலங்கை சார்பான உயரிய அறிக்கையினை உரையாக முன் வைக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது G.L பீரிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் உட்பட பல முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மனித உரிமை கூட்ட தொடருக்காக இலங்கை தயார்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version