யுக்ரைன் போர்; பேசி தீத்துங்க – இலங்கை அறிவிப்பு

யுக்ரைனில் நடைபெறும் ரஸ்சியா – யுக்ரைன் இடையிலான போரை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு இலங்கைஅரசாங்கம் அறிவித்துள்ளது.

யுக்ரேனில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலையடைவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும், போரை உடனடியாக நிறுத்துவதற்கு உழைக்குமாறும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

இராஜதந்திரம் மற்றும் நேர்மையான உரையாடல் மூலம் நெருக்கடியை தீர்க்க சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தை அரசாங்கம் வலியுறுத்துவதாக வெளியுறவு துறை அமைச்சின் செயலாளர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

யுக்ரைனில் உள்ள இலங்கை மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், இலங்கையரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

யுக்ரைன் போர்; பேசி தீத்துங்க - இலங்கை அறிவிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version