புதிய நடைமுறைகளேடு பாடசாலைகள் மீள ஆரம்பம்

2021 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக நாளைய தினம்(07.03) பாடலசைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. ஆனால் பாடசாலைக்கு மாணவர்களை அழைப்பதில் அரசாங்கம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

பாடசாலைக்கு விடுமுறை வழங்கும் போது பாடசாலைகள் முழுமையாக திறக்கப்பட்டு சாதாரண நிலையில் இயங்கி வந்தன.

தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாடசாலை மாணவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு வரும் நிலையில் பாடசாலைக்கு மாணவர்களை இரண்டு கட்டங்களாக அழைப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஒரு வகுப்பில் 20 மாணவர்களே அதிகமாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட முடியுமெனவும், வாரத்திற்கு ஒரு குழு என்ற அடிப்படையில் மாணவர்களை பிரித்து கல்வி நடவடிக்கைகளை நடாத்துமாறும் கல்வி அமைச்சு சுற்று நிரூபம் மூலம் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அரச, மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுளள்து.

புதிய நடைமுறைகளேடு பாடசாலைகள் மீள ஆரம்பம்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version