வவுனியாவில் நாளை (18.09) மதுபான கடைகள் திறக்கப்படும்

இலங்கையில் மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்கிய போதும், வவுனியாவில் திறக்கப்பட்ட மதுபான கடைகள் மீண்டும் பூட்டப்பட்டன.

மதுவரி திணைக்களம் மற்றும் சுகாதார திணைக்களம் இணைந்து மதுபான கடைகளை பூட்டியுள்ளன. மக்கள் கூட்டம் அதிகம் கூடியமையாலும், மதுபான கடை உரிமையாளர்கள் சரியான சுகாதர ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதற்காகவும் மதுபான கடைகளை பூட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (17.09.2021) காலை 9 மணிக்கு மதுபான கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு சுகாதர நடைமுறைகளை பின்பற்றாமல் மக்கள் கூட்டம் சேருமாயின் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசாரும், சுகாதர பிரிவினரும் கடும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version