தீவக பாடசாலை வெற்றிடங்கள் நிரப்பப்பட்டன

தீவக கல்வி வலய பாடசாலைகளில், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், ஆரம்பக்கல்வி பாடங்களுக்கு நிலவிய ஆசிரிய வெற்றிடங்கள் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தீவக வலய கல்விப்பணிப்பாளரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன், மாவட்ட அரச அதிபர் க. மகேசன் தலைமையில் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மீளாய்வு கூட்டத்தில், தீவக கல்வி அபிவிருத்தி நிலமைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

இதன்போது, தீவகத்தில் நிலவிய ஆசிரிய வெற்றிடங்களுக்கு, தேசிய போதனாவியல் டிப்ளோமா கற்கையை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கணிதம் – 04, விஞ்ஞானம் – 05, ஆங்கிலம் – 04, ஆரம்பக்கல்வி – 08 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக தீவக வலய கல்விப்பணிப்பாளர் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் தெரிவித்தாக அங்கஜன் மேலும் தெரிவித்துள்ளார்.

தீவக பாடசாலை வெற்றிடங்கள் நிரப்பப்பட்டன
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version