விலையதிகரிப்பற்ற பால்மா புதுவருடம் முதல்

புதுவருடம் முதல் மில்கோ நிறுவனத்தின் பால்மா சந்தைகளில் கிடைக்குமென அந்த நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த நான்கு மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பால்மா தயாரிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், விலையினை அதிகரிக்காமல் ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட விலையில் மில்கோ பால் மா விற்பனை செய்யப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தயாரிப்புக்கு தேவையான பொருட்கள் விலையுயர்ந்துள்ள போதும் விலையினை அதிகரிக்காமல் தாம் விற்பனை செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வரும் வாரம் முதல் நகர பகுதிகளில் நியாயமான விலையில், உடன் பாலை விற்பனை செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

35,000 பால்மா பக்கற்றுகளை தயாரிக்க 100,000 லீட்டர் பால் தினமும் தேவைப்படுவதாகவும், எவ்வாறு இருப்பினும் பால் மா பக்கெட்டுகள் மக்கள் பாவனைக்கு வெளியிடப்பபடுமென ரேணுக பெரேரா தெரிவித்துள்ளார்.

விலையதிகரிப்பற்ற பால்மா புதுவருடம் முதல்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version