ஒட்டு மொத்த அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வருகிறது.

ஐக்கிய மக்கள் கூட்டணியினால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிரானது மட்டுமல்ல, ஓட்டுமொத்த அரசாங்கத்துக்கும் எதிரானது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

@அரசுக்கு எதிரான “நம்பிக்கை இல்லா தீர்மான”த்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி கையெழுத்திட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் கூட்டணியாக நாமே இதை கொண்டு வருகிறோம்.இந்நிலையில், இந்த, “நம்பிக்கையில்லா” பிரேரணை என்பது ஜனாதிபதி, பிரதமர் ஆகிய தனிநபர்களுக்கு எதிரானது என காட்டி தப்ப எவரும் முயல கூடாது என தெரிவித்துள்ள மனோ கணேசன்,

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு எதிராகவும் நாம் கடுமையான பிரேணைகளை கொண்டு வருகிறோம்.
ஆனால் முதலில் வரும் இது முழு அரசாங்கத்துக்கும் எதிரானதாகும். அரசாங்கத்திலிருந்து வெளியே வந்ததாக சொல்லும் அனைவரும் இதை ஆதரிக்க வேண்டும்.முட்டாள் காரணங்களை சொல்லி எவரும் மக்களை முட்டாளாக்க முயல கூடாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளார்.

ஒட்டு மொத்த அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வருகிறது.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version