சென்னை வென்றது- முதலிடத்தை கைப்பற்றியது

ஐ.பி.எல் கிரிக்கட் போட்டி தொடர் மீண்டும் ஆரம்பமாகியுள்ள நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று முதலிடத்தை கைப்பற்றிக்கொண்டது.

மீண்டும் IPL தொடங்கி விட்டது. சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கான IPLபோட்டியில், நாணய சுழற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.


சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்படுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களை பெற்றது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ருத்ராஜ் கைகுவாட் 88 [58] ஓட்டங்களை பெற்றார். மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில் ட்ரன்ட் போல்ட் 2 விக்கெட்களையும், அடம் மிலேன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் சவுரப் திவாரி 50 ஓட்டங்களை பெற்றார். சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் டுவைன் பிராவோ 3 விக்கெட்களையும், தீபக் சஹர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ருத்ராஜ் கைகுவாட் தெரிவு செய்யப்பட்டார்

இலங்கை நேரப்படி இன்று (20.09.2021) மாலை 7.30 ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

-பிரவிக்- தரம் 03-

(சிறு திருத்தங்கள் செய்யப்பட்டது)

Photo Credit – IPL

சென்னை வென்றது- முதலிடத்தை கைப்பற்றியது

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version