அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களை விரட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நம்பகரமான தகவல்கள் தனக்கு கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இரும்புக்கரம் கொண்டு மக்களின் இறையாண்மையை நசுக்குவதை எதிர்க்க மக்கள் அந்த இடத்தில் அணிதிரளுமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.