இலங்கையில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமைதியான போராட்டங்களில் ஈடுப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமை தொடர்பில் தமது கவலையினை வெளியிட்டுள்ள இராஜாங்க திணைக்களம், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல் சிக்கல்களுக்கு நீண்டகால தீர்வினை காண்பதற்கு அமைதியாக செயற்படுமாறு அமெரிக்கா இராஜங்க திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
