பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டமைக்கு, தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் தனது கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி முழுமையாக சட்டத்தை மீறியுள்ளார் என சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதியினை வீடு செல்லுமாறு மக்கள் கோருகின்றனர். பாராளுமன்றத்தில் நாங்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டு வரவுள்ளோம் எனவும் கூறியுள்ளார் அவர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆரம்பத்திலிருந்து சட்டபூர்வமான உரிமையினை பாராளுமன்றத்தில் கொண்டிருக்கவிலை எனவும், அவர் தனது தொகுதியில் வெற்றி பெறவில்லை என்பதனையும் சுமந்திரன் சுட்டி காட்டியுள்ளார்.
