வவுனியாவில் இளைஞரது என சந்தேகிக்கும் மனித எச்சங்கள் மீட்பு

வவுனியாவில் அண்மையில் காணமால் போனதாக சந்தேகிக்கப்படும் இளைஞரின் எலும்பு பகுதிகள் கண்டுபிடிப்பு

வவுனியா மாமடு காட்டுப்பிரதேசத்தில் பிரதேசத்தில் மனிதர் ஒருவருடைய மனித எச்சங்கள் இன்று(20.06) மதியம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்பு கூடுகள், மாமடு பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதுடைய தனுஸ்க அமரதாச என்பவரின் எச்சமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் மாமடு பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதேசவாசிகளால் தேடுதல் நடத்தப்பட்டு வந்த நிலையிலேயே குறித்த மனித எச்சம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மனித எச்சம் காணப்பட்ட இடத்திற்கு அருகில் நஞ்சுப்போத்தல் ஒன்றும் காணப்பட்ட போதிலும் குறித்த மரணம் எவ்வாறு சம்பவித்தது என்பது தொடர்பில் மாமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இறந்தவர் பாவித்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு சோடி காலணிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

வவுனியாவில் இளைஞரது என சந்தேகிக்கும் மனித எச்சங்கள் மீட்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version