ஜப்பான் இலங்கைக்கு உதவி

ஜப்பான் இலங்கைக்கு 30 லட்சம் டொலர்களை அவசர தேவைக்கான உதவியாக இலங்கைக்கு வழங்க முடிவு செய்துள்ளது. யுனிசெப் மற்றும் உலக உணவு திட்டத்தின் ஊடாக இந்த உதவிகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மருத்துவ மற்றும் உணவு உதவிகளுக்காக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடினமான நெருக்கடிகளை சந்திக்கும் இலங்கை மக்கள் இந்த உதவியின் மூலம் மீள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு திட்டங்கள் செயற்படுத்தப்படும் வரை ஜப்பான் அரசாங்கம் மேலும் இலங்கைக்கான உதவிகளை வழங்க திட்டமிட்டு வருவதாகவும் ஜப்பான் தூதரகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் இலங்கைக்கு உதவி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version