டெல்லி அணிக்கு வெற்றி. அடுத்த சுற்று உறுதி

IPL கிரிக்கெட் தொடரில் டெல்லி கப்பிடல்ஸ் அணி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினை 33 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பினை பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய டெல்லி கப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷ்ரேயாஸ் ஐயர் 43(32), ஷிம்ரோன் ஹெட்மியர் 28(16), றிஷாப் பான்ட் 24(24) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் முஸ்டபிசுர் ரஹ்மான் (4-22), சேட்டன் சக்ரியா (4-33) ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்த 121 ஓட்டங்களை பெற்றது. இதில சஞ்சு சம்சன் 70(53) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் அன்றிச் நொக்யா 2 (4-29) விக்கெட்களை கைப்பற்றினார்.

போட்டியின் நாயகனாக ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவு செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் அணி ரோயல்ஸ் அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற 5 போட்டிகளிலும் வெற்றி பெறவேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

டெல்லி அணிக்கு வெற்றி. அடுத்த சுற்று உறுதி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version