மீண்டும் அதிகரிக்கும் கொவிட் தொற்று!!

கடந்த காலங்களில் கொவிட் பாதிப்பு சற்று குறைந்திருந்தபோதும் மீண்டு இப்போது அதிகரிக்கின்றது. நேற்று மூன்று கொவிட் மரணங்கள் பதிவாகியிருந்தது . 129 பேருக்குகொவிட் தொற்று உறுதியாகியிருந்தன.

கொவிட் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு, முதல் இரண்டு நாட்களில் அதிக காய்ச்சல் காணப்படும் எனவே உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும் எனவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிள்ளைகளில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்கள் தவிர டெங்கு மற்றும் இன்புளுவன்சா நோயாளர்களும் உள்ளதாகவும்
கடந்த வாரத்தில் மூச்சுத் திணறல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version