2027 வரை மின் வெட்டு தொடருமா?

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் மின் வெட்டு தொடர்கிறது, எப்போது இதற்கான முடிவு கிடைக்கும் என எல்லோரும் எதிர்பார்த்திருக்கும் போது, மின்சார விநியோகத்திற்கான உரிய வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படாவிட்டால் 2027 ஆம் ஆண்டுவரை பல்வேறு சந்தர்ப்பங்களில் மின்துண்டிப்பை மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் மற்றும் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை பொறுப்பானவர்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லை எனவும் 2026 மற்றும் 2027 ம் ஆண்டுகளில் அடிக்கடி மின்துண்டிப்படி மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்க தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version