அமெரிக்க தூதுவர் – சஜித் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சங்க் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (19.08) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட அதேவேளை நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவரின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

“இலங்கையின் பொருளாதார, அரசியில் நெருக்கடி தொடர்பாகவும் எதிர்க்கட்சி தலைவரோடு கலந்துரையாடியதாகவும், இலங்கையின் வேறுபட்ட தரப்புகளை சேர்ந்தவர்கள் இலங்கையின் நீண்ட கால தேவைகளை பூர்த்தி செய்ய எவ்வாறு இணைந்து செயற்படுவது என்ற யோசனைகள் தொடர்பாகவும் கலந்தாலோசித்ததாக” இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக அமெரிக்கா நட்புறவையும் ஆதரவையும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டு மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு நாட்டிற்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கும் என தூதுவர் தெரிவித்ததாக எதிர்க்கட்சி ஊடக பிரிவு கூறியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version