வல்லை பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று(20.08) நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.
மூன்று நாள்களாக காணாமற்போன முதியவரின் சடலம் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
தொண்டைமானாறு வல்லை வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் குருமூர்த்தி (வயது-75) கடந்த 17ஆம் திகதி புதன்கிழமை காணாமற்போயிருந்தார்.
சடலம் உருக்குலைந்து காணப்படுவதனால் அவர் அணிந்திருந்த ஆடைகளை வைத்து உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.
வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த நபர் கனடாவிலிருந்து இலங்கை வந்திருந்த நிலையில் நடைப்பயிற்சிக்காக சென்றுவருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பாத நிலையில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இறந்தவர் புத்தி சுயாதீன பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார் எனவும் உறவினர்கள் மூலமாக அறிய முடிந்தது.