இலங்கையை விட்டு வெளியேறிய சீன கப்பல்

இலங்கைக்கு கடந்த 16 ம் திகதி வருகை தந்த சீனாவின் விண்வெளி ஆய்வு கப்பல் யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்தது. எரிபொருள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட தேவைகளை மீள் நிரப்புகை செய்யவே வருகை தந்ததாக சீன அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் அறிவித்திருந்தன.

தமது தேவைகளை நிவர்த்தி செய்ததை தொடர்ந்து குறித்த கப்பல், சற்று முன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கப்பல் இலங்கை கடற் பரப்பில் நங்கூரமிடப்பட்டதற்கு இந்தியா எதிர்ப்பை தெரிவித்திருந்தது. ஆரம்பத்தில் கடந்த 11 ஆம் திகதி இலங்கைக்கு வருவதாக இருந்த போதும் இந்திய அதிருப்தி காரணமாக இலங்கையின் கோரிக்கைக்கு அமைவாக கப்பலின் பயணம் தாமதித்தது. கப்பலின் வருகை தொடர்பில் உறுதி செய்த பின்னர், இலங்கை கடல் எல்லைக்குள் வருகை தர இலங்கை அரசு அனுமதி வழங்கியது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version