எரிபொருள் கட்டணமானது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையின் கீழ் திருத்தப்படாமையின் காரணமாக மின் கட்டணமானது பெரிய அளவில் அதிகரித்துள்ளது என மின்சாரத்தை பயன்படுத்துவோரின் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து ,இவ்வாறு மின்கட்டணங்கள் அதிகரிப்பதன் காரணமாக மக்கள் மேலும் பொருளாதார சிக்கல்களுக்கு முகம்கொடுப்பதாக சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்தார்.
இன்றைய தினம் (29.08) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.