தாய்க்காக தந்தையை கொன்ற மகன்

குடிபோதையில் தனது தாயை துன்புறுத்தி தாக்கிய தந்தையை அவரது மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் ஹந்த ஒலுவ பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என ஊருபொக்க பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு (08.09) அவர்களது வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்தும், இக்கொலை சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version