பசில் ராஜபக்ச அமெரிக்கா பயணம்

 

நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்சவிற்கு, 2023ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அண்மையில் .அனுமதியளித்திருந்தது.

வைத்திய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களால்,அமெரிக்காவுக்கு செல்ல எதிர்பார்த்துள்ளமையால், அதற்காக அனுமதி வழங்குமாறு பசில் ராஜபக்ச சார்பில் உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.

தொடர்ந்தும், இதனை பரிசீலனைக்கு எடுத்த பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழுவினர் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு வெளிநாடு செல்ல அனுமதியளித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version