குருணாகல் ஆயரை ஜனாதிபதி சந்தித்தார்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், இலங்கை இராஜகுரு சபையின் தலைவரும், குருணாகல் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயருமான வண. பிதா கலாநிதி ஹரோல்ட் அந்தோனி பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (02.10) பிற்பகல் நடைபெற்றது.

குருநாகல் கத்தோலிக்க ஆயர் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி, ஆயரது உடல்நிலை குறித்து கேட்டறிந்த பின்னர், கத்தோலிக்க சமய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பில் குருணாகல் கத்தோலிக்க மறைமாவட்ட பதில் ஆயர் வண.பிதா பியல் ஜானக பெர்னாண்டோ மற்றும் குருநாகல் கத்தோலிக்க மறைமாவட்ட பொருளாளர் வண.பிதா சாகர பிரசாந்த ஆகியோருடன் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் கலந்துகொண்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version