வவுனியா துப்பாக்கி சூட்டில் 21 வயது யுவதி பலி

வவுனியா நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் நேற்று இரவு இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.

சிவா நகர் பகுதியில் வசிக்கு துரைராஜசிங்கம் பிரமிளா என்ற 21 வயது யுவதி தனது வீட்டிற்கு வெளியில் வரும்போது அவர் மீதே இத்துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா துப்பாக்கி சூட்டில் 21 வயது யுவதி பலி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version