இலங்கை அணிக்கு மேலும் ஒரு உபாதை தலையிடி.

T 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து துஸ்மாந்த சமீர விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஐக்கிய அரபு அமீரக அணியுடனான போட்டியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக அவர் உலக கிண்ண தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உலக கிண்ண தொடருக்கு முன்னர் உபாதையடைந்திருந்த சமீர, முழுமையாக குணமடைந்துவிட்டார் என்றும் அதனாலேயே அணியில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தே அணியில் இணைக்கப்பட்டிருந்தார் .

டில்ஷான் மதுசங்க உபாதை காரணமாக அணியிலிருந்து விலகிய நிலையில், பினுர பெர்னாண்டோ அவரின் இடத்துக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதுவரை மாற்றீட்டு வீரர் தொடர்பில் அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

அபாய கட்டத்தை தாண்டும் நிலையிள்ள இலங்கை அணிக்கு மேலுமொரு அடி. ICC  T 20 World Cup. V Media News.
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version