பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் குஜ்ரன்வால பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. கீழ் பகுதியிலேயே காயம் ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த துப்பாக்கி சூட்டில் அவரது கட்சி உறுப்பினர் ஒருவரும், பிறிதொரு பொதுமகனும் காயமடைந்துள்ளனர். எவரும் இந்த சம்பவத்தில் இறக்கவில்லை எனவும், இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சியில் நடைபெற்ற மக்கள் போராட்டம் ஒன்றில் கலந்துகொண்ட போதே இந்த துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version