பிரேசில் மற்றும் சேர்பியா அணிகளுக்கிடையில் கட்டாரில் நடைபெற்ற உலக கிண்ண காற்பந்தாட்ட போட்டியில் பிரேசில் அணி 2-0 என வெற்றி பெற்றுள்ளது.
ஆரம்பம் முதலே பிரேசில் அணி கோல்களை பெற கடுமையாக முயற்சி செய்தது. 62 ஆவது நிமிடத்திலேயே முதல் கோலை பெறமுடிந்தது. அந்த கோலை அடித்த ரிச்சாளிசன் 73 ஆவது நிமிடத்தில் அடித்த அபாரமான கோல் ஒன்றின் மூலமாக பிரேசில் அணியின் கோல் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.
பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் சிறப்பாக விளையாடிய போதும் கோல்கள் எதனையும் பெற முடியவில்லை.
| அணி | போட்டி | வெற்றி | தோல்வி | சமநிலை | புள்ளி | கோ வித் | அடி.கோ | பெ.கோ | |
| 1 | பிரேசில் | 01 | 01 | 00 | 00 | 03 | 02 | 02 | 00 |
| 2 | சுவிற்சலாந்து | 01 | 01 | 00 | 00 | 03 | 01 | 01 | 00 |
| 3 | கமரூன் | 01 | 00 | 00 | 01 | 00 | -01 | 00 | 01 |
| 4 | சேர்பியா | 01 | 00 | 01 | 00 | 00 | -02 | 00 | 02 |