யாழ் காலாச்சார நிலைய முதலாவது கூட்டம்

யாழ்ப்பாணக் கலாசார நிலையம் தொடர்பான கூட்டு முகாமைத்துவ சபையின் முதலாவது கூட்டம் இன்று(12.02) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றதாக இலங்கைக்கான இந்தியா உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் இந்தியா உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரது இணைத் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் மற்றும் ஏனையசிரேஸ்ட அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இச்சந்திப்பில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் நடைபெற்றதுடன் குறிப்பிட்ட கால எல்லையுடனான இலக்குகளை அடைவதற்காக உபகுழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply