நகை அடகு தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!

இவ்வருடத்தின் முதல் 10 மாத காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடி காரணமாக 193 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கத்தை மக்கள் பல்வேறு நிறுவனங்களில் அடகு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பாரிய உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் 10 அடகு சேவை நிறுவனங்கள் உட்பட 13 நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய கணக்கெடுப்பில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

தங்க ஆபரணங்களை அடகு வைத்துள்ளவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தினர் என்றும், இந்த பணம் குழந்தைகளின் கல்வி மற்றும் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போது தனியார் அடமான மையங்களை நாடும் போக்கு காணப்படுவதாகத் தெரிவித்த பேராசிரியர், இம்மையங்கள் மக்களுக்கு அதிகளவு பணம் வழங்குவதே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version