பலமிக்க கட்சி என்றால் அது ‘மொட்டு’ கட்சியே!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்குவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்டத்தின் வேட்பு மனுவில் கையொப்பமிடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கமும் மொட்டு கட்சியும் சதி செய்வதாக கூறிய எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரித்த அமைச்சர், தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கோ மொட்டு கட்சிக்கோ இல்லை என சுட்டிக்காட்டினார்.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“மொட்டு கட்சி என்பது கிராம மட்டத்தின் பலமான அடித்தளத்தில் இருந்து உருவாக்கப்பட்ட கட்சியாகும். இத்தேர்தலில், மற்ற அனைத்து அரசியல் கட்சிகளையும் விட வலிமையான அணி எங்களிடம் உள்ளது. எங்கள் வேட்பாளர்கள் அனைவரும் கிராமங்களில் பணிபுரிந்து, பொதுப்பணிகளில் ஈடுபட்ட அனுபவமுள்ளவர்கள். மேலும் மக்களுக்கு சேவையாற்றிய, உழைத்த ஒரு குழுவினரே இத்தேர்தலில் முன்னிறுத்தப்பட்டுள்ளனர். எங்கள் அணி வாயால் கிழங்குகளை விதைத்தவர்கள் அல்ல. வேலை செய்து தன் சேவையை செய்து காட்டியவர்களே போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தல் எங்களுக்கு ஒரு சவால் இல்லை. மிகவும் கடினமான காலங்களில் இதுபோன்ற தேர்தல்களில் நாங்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம்.

அரசு என்ற முறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் மற்றும் தேர்தல் ஆணையம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் வேறானது. அரசாங்கம் என்ற வகையில், இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் அரச ஊழியர்களின் சம்பளம், சலுகைகள் மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் கடந்த காலங்களில் எதிர்நோக்கிய பிரச்சனைகளை நாங்கள் அறிவோம். பொருளாதாரம் ஓரளவுக்கு நிர்வகிக்கப்பட்டு மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வரும் இவ்வேளையில் தேர்தலை நடத்துவதா வேண்டாமா என்பதை இந்நாட்டு மக்கள் தீர்மானிக்கின்றனர்.

தேர்தலுக்கு பணம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த காலங்களில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இல்லாமல் அரசாங்க ஊழியர்கள் தேர்தலுக்கு தயாராகி வருவதாக கூறப்பட்டது. அதற்கு தேர்தல் ஆணையாளர் பொறுப்பேற்கத் தயாராக இருந்தால், நாங்கள் தேர்தலைச் சந்திக்கத் தயார். ஒதுக்கீட்டில் சிக்கல் இருப்பதால், நமது அமைச்சுக்களின் ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டதன் பின்னணியிலும் இந்தத் தேர்தல் குறித்து நாங்கள் பேசுகிறோம். தேர்தல் ஆணையத்திடம் பணம் இருப்பதால் தான் வேட்புமனுத் தாக்கல் செய்கின்றனர். தேர்தலுக்குத் தேவையான பணத்தைக் திரட்டுவது அவர்களின் பொறுப்பு. நாங்கள் கட்சி என்ற வகையில் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்.

இந்த அரசாங்கம் மற்றும் மொட்டுக் கட்சியும் தேர்தலை ஒத்திவைக்க சதி செய்வதாக சிலர் கூறுகின்றனர். தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. தேர்தல் ஆணையத்திடம் வாக்களித்தோம் எனவே அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். என்று அவர் தெரிவித்துள்ளார்.

பலமிக்க கட்சி என்றால் அது 'மொட்டு' கட்சியே!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version